உலகம்

பிலிப்பின்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு

பிலிப்பின்ஸில் பாடசாலையொன்றில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள அரசு நடத்தும் உயர்நிலைப் பாடசாலையில் இன்று (22) இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

 

 

 

ஐந்து பேர் காயமடைந்துள்ளரென பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

குறித்த சம்பவம் நடந்த உயர்நிலைப் பாடசாலையின் மாணவர் ஒருவர் உட்பட, இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பாடசாலையில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button