விளையாட்டு

இந்தியாவிடம் போராடி தோற்றது சிம்பாப்வே

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் நேற்று (26) இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

சென்னையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.

 

களம் புகுந்த இந்திய அணி வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஓட்டங்களை குவித்திருந்தனர்.

 

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அபிஷேக் சர்மா 55 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 50 ஓட்டங்களையும், திலக் வர்மா 16 பந்துகளில் 44 ஓட்டங்களையும் அதிரடியாக குவித்தனர்.

 

இந்நிலையில் 257 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்து.

 

சிம்பாப்வே அணி சார்பில் பிரைன் பெனட் இறுதிவரை அதிரடியாக ஆட்டமிழக்காமல் துடுப்பாடி 59 பந்துகளில் 97 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button