இந்தியா

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்

திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார்.

 

அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்தவர்.

 

அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

 

தொடர்ந்து மீண்டும் அக்கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர், அது பலன் அளிக்காத நிலையில் திமுக-வில் இணைந்துள்ளார்.

 

அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button