
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
எனினும், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மீண்டும் ராணுவ மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்தது.
ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு 60 நாட்களுக்குள் இறுதித் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.





