உலகம்

கனடா மீதான புதிய வரிகளை மூன்று நாட்களுக்கு நிறுத்திய ட்ரம்ப்

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்நாட்டின் பல்வேறு வகையான பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன (ஆவணங்கள் இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன).

 

இதன் அடிப்படையில், நாளை (புதன்) காலை முதல் அமுலுக்கு வரவிருந்த கனடா மீதான 50% வரிகளை நிறுத்தி வைத்துள்ளேன் என்று ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

சுமார் 20 பில்லியன் டொலர் (28 பில்லியன் கனேடிய டொலர்) மதிப்பிலான கனடிய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

வாகனங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மற்றும் பல கனேடிய மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே முட்டுக்கட்டை நீடிக்கிறது.

ஆகஸ்ட் 19-ஆம் திகதியை காலக்கெடுவாகக் குறிப்பிட்டு புதிய வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முதல் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button