உலகம்

ட்ரம்பின் இறுதி முடிவு: துருப்புக்களை உக்ரைனில் தரையிரக்கவுள்ள பத்து ஐரோப்பிய நாடுகள்

அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஆதரவாக 10 ஐரோப்பிய நாடுகள் தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்க ஒரு பன்னாட்டு “உறுதிப்படுத்தும் படையை” அனுப்பும் திட்டத்தை ஐரோப்பிய அதிகாரிகள் வருத்துள்ளதாக பிரித்தானிய செய்தித்தளம் ஒன்று விபரித்துள்ளது.

நூற்றுக்கணக்கான வீரர்கள்

மேலும், குறித்த தரப்பு ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள் என்று இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

முதல் கட்டத்தில் நூற்றுக்கணக்கான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வீரர்கள் உட்பட ஐரோப்பிய துருப்புக்கள், உக்ரைனில், போர் முனையிலிருந்து விலகி, பயிற்சி மற்றும் வலுவூட்டல்களில் அதன் இராணுவத்திற்கு உதவுவதற்காக நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டம், உளவுத்துறைப் பகிர்வு, எல்லை கண்காணிப்பு, ஆயுத விநியோகம் மற்றும் வான் பாதுகாப்பு ஆகியவற்றில் பங்களிக்க அமெரிக்காவை பின்தங்க வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐரோப்பியப் படையின் ஒட்டுமொத்த அளவு மற்றும் பங்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் வரும் நாட்களில் விவரங்கள் ஒப்புக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அமெரிக்கர்களின் வெளியேற்றத்தை ட்ரம்ப் நிராகரித்தார்.

எனினும் குறித்த கோரிக்கைக்கு பதிலாக உக்ரைனின் வான்வெளியைக் கண்காணிக்க அமெரிக்கா விமான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button