செம்மணி சிந்துபாத்தி மயாணத்தில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்றும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மூன்று கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன. அதில் மூன்றாம் கட்டத்தின் 33 ஆவது நாள் அகழாய்வு பணிகள் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்போதே மேலும் 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 409 முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.மேலும்
இன்று 28 மற்றும் 29 ஆம் இலக்க எலும்புக்கூடு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.







