இலங்கை

அரச ஊழியர் சம்பளம் – ஓய்வூதிய பிரச்சினை தீர்க்க 15 பேர் கொண்ட ஆணைக்குழு நியமனம்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதியினால் 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று தெல்கே அசோக பீரிஸின் தலைமையில் நியமிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையில் எவ்வாறான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதே இந்த ஆணைக்குழுவை நிறுவியதன் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button