
உரிய தரநிலைகளைப் பின்பற்றாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
பதிவு செய்யப்படாத நிலையங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறும், தரமற்ற முதியோர் இல்லங்களுக்கு இனி அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.





