விளையாட்டு

முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்து சாதனை

முதல் தர கிரிக்கெட் வரலாற்றி அதிவேக அரைச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மேகாலயாவின் ஆகாஷ் குமார் சவுத்ரி படைத்துள்ளார்.

25 வயதான அவர், ரஞ்சி கிண்ண தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் அரைச்சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

இதன் மூலம் இங்கிலாந்தின் வெய்ன் வைட்டின் சாதனையை ஆகாஷ் குமார் முறியடித்தார்.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து முதல் தர கிரிக்கெட்டில் எக்ஸஸ் அணிக்கு எதிராக போட்டியில் 12 பந்துகளில் வெய்ன் வைட்டின் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.

வெய்ன் வைட்டின் தான் எதிர்கொண்ட 11 பந்துகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக எட்டு பந்துகளை எடுத்தார்.

எட்டாவது இடத்தில் களமிறங்கிய ஆகாஷ், லிமர் டாபி வீசிய ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரராக ஆகாஷ் மாறினார்.

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி மற்றும் கேரி சோபர்ஸ் ஆகியோர் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்திருந்தனர்.

எவ்வாறாயினும், முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்த முதல் வீரர் ஆகாஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button