அரசியல்

நான் உயிருடன் இருக்கின்றேன் – சமூக ஊடக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தான் இறந்து விட்டதாக வேடிக்கையான ஒரு சமூக ஊடக பதிவை கண்டதாக தெரிவித்துள்ளார்.

வாசுதேவ நாணயக்கார காலமானதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

குறித்த விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றின் கருத்து தெரிவித்த போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இறக்கும் வரை அரசியல்

தான் நலமுடன் இருப்பதாகவும் தான் இறந்துவிட்டதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் தகவல் கிடைத்ததாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விஷயங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்கும் வரை அரசியல் செய்வேன் என்று கூறிய நாணயக்கார, தனக்கு வலிமை இல்லாததால் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் சாகும் வரை ஓய்வு பெறுவதில்லை. வலதுசாரி குழுக்களின் தாக்குதல்களை முறியடிப்பது, இடதுசாரி அரசியல் கொள்கைகளை முன்னேற்றுவது, எனது கட்சியை வலுப்படுத்துவது மற்றும் இந்த நாட்டில் ஒரு ஐக்கிய இடதுசாரி இயக்கத்தை உருவாக்க உதவுவது எனது குறிக்கோள் என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button