விளையாட்டு

ஆசியக் கிண்ணம் : ஹொங்கொங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட பங்களாதேஷ்

ஆசியக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற குழு ‘ஏ’பிரிவில் இடம்பெற்றுள்ள ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

17-வது ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், கொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அபுதாபியில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் – ஹொங்கொங் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதையடுத்து ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஹொங்கொங் அணி சார்பாக ஷீஷான் அலி, நிஷாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

அவர்கள் முறையே 30 ஓட்டங்கள், 42 ஓட்டங்கள் மற்றும் 28 ஓட்டங்களை எடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் நிறைவில் ஹொங்கொங் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

பங்களாதேஷ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் அரைச் சதமடிமத்து அதிகபட்சமாக 59 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button