இலங்கை

எல் நினோ தாக்கம் – அதிகாரிகள் குழு அமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

எல் நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழற்கியுள்ளது.

 

 

 

இலங்கை காலநிலை மாற்றங்களுக்கு கூருணர்வு மிக்க நாடாக இருப்பதால், உலகளாவிய காலநிலை திருப்புமுனையாக எல் நினோ நிலைமை காரணமாக எமது நாட்டில் மழைவீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதிக வெப்பம், வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய இடர்கள் அதிகரித்துள்ளதுடன், அதனால் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார துறைகள் பலவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றது.

 

 

 

காலநிலை மாற்றங்களின் தாக்கங்களால் இவ்வாண்டின் இறுதியாண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடுமென விஞ்ஞானபூர்வமான தீர்க்கதரிசனத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள எல்நினோ நிலைமைகளின் பாரதூரம் மற்றும் தாக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை அரசு அடையாளங்கண்டுள்ளது.

அதனால், ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமுதாயமட்ட அமைப்புக்களுக்கிடையே ஒருங்கிணைப்புக்களைப் பலப்படுத்தி, தேசிய மட்ட செயற்பாட்டுத் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

 

(i)எல்நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக குறுகியகால, நடுத்தரக்கால மற்றும் நீண்டகால திட்டங்களைத் தயாரித்தல், அனைத்து அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டி அனர்த்தங்களின் ஆபத்தான நிலைமைகளைத் தணிப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கீழ்வரும் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்:

மருத்துவர்) தம்மிக்க பட்டபந்தி – சுற்றாடல் அமைச்சர் – (தலைவர்)

 

•கே.டீ. லால் காந்த – விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்

 

•சமந்த வித்யாரத்ன -பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

 

•அநுர கருணாதிலக்க – துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர், மற்றும் வலுசக்தி அமைச்சர்

 

•வசந்த சமரசிங்க -வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

 

•(மருத்துவர்) சுசந்த ரணசிங்க – வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

 

 

 

(ii)மேற்குறிப்பிட்ட அமைச்சரவை உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக கீழ்க்காணும் வகையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமித்தல் :

 

 

 

•ஜனாதிபதி பணிக்குழாம் தலைவர் – (தலைவர்)

 

•செயலாளர், சுற்றாடல் அமைச்சு

 

•செயலாளர், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

•செயலாளர், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

 

•செயலாளர், வலுசக்தி அமைச்சு

 

•செயலாளர், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு

 

•நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்

 

•பணிப்பாளர் நாயகம், வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்

 

•பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல்திணைக்களம்

 

•பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம்

 

•பணிப்பாளர் நாயகம், இலங்கை மகாவலி அதிகாரசபை

 

•பொது முகாமையாளர், தேசிய நிர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

 

•பொது முகாமையாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி, இலக்ரிசிற்றி ஜெனரேஷன் லங்கா (பிறைவெட்) லிமிட்டட்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button