
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஒப்பந்தத்தை தெஹ்ரான் நிறைவேற்றத் தவறினால், ஈரான் மீதான அமெரிக்கக் குண்டுவீச்சு “மிகவும் உயர்ந்த அளவிலும் தீவிரத்திலும்” மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஒப்பந்தத்திற்கு இணங்குதல்: “ஒருவேளை இது ஒரு பெரிய அனுமானமாக இருக்கலாம், ஒப்புக்கொள்ளப்பட்டதை ஈரான் கொடுக்க சம்மதிக்கும் பட்சத்தில், ஏற்கனவே புகழ்பெற்ற அந்த மாபெரும் சீற்றம் முடிவுக்கு வரும், மேலும் மிகவும் பயனுள்ள அந்த முற்றுகையானது, ஈரான் உட்பட அனைவருக்கும் ஹோர்முஸ் நீரிணையையைத் திறக்க அனுமதிக்கும்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ளத் தவறினால், குண்டுவீச்சு மீண்டும் தொடங்குவதுடன், அது முன்பை விட மிகவும் தீவிரமாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.





