அரசியல்

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சாதகமாகிய மகிந்தவின் முடிவு

யுத்தக்களத்தில் சரத் பொன்சேகா பெரும் வீரன். ஆனால் அரசியல் மேடைகளில் ஏறினால் அவைருக்கும் வாயசைக்கும் ‘கூரன்’ போன்றவர் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்ததெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (03.09.2025) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2009 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை யுத்த நிறுத்தமொன்றை அறிவித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சொன்ன கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வெறும் கேலிக் கூத்து

தொடர்ந்து உரையாற்றிய அவர், அவர் சொன்ன குறித்த கருத்து வெறும் கேலிக் கூத்தானதாகும். 48 மணித்தியாலம் போர் நிறுத்தம் வழங்கியிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் தானே.

அவ்வாறு ஒரு டீல் நடந்திருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகிந்த உடன் தானே கதைத்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் அதில் பலனை பிரபாகரன் அனுபவித்திருக்க வேண்டும். இவை கேலிக்குரியதாகும். அரசியலில் அவர் பாவத்திற்குள்ளான ஒரு ‘கூரன்’ போன்றவர்.

நான் இதை தெரிவிப்பது அவர் ஒரு அரசியல்வாதி என்ற வகையில். இராணுவத் தளபதியாக அவரை நாம் மதிக்கிறோம்.

யுத்த களத்திற்கு பொறுப்பான அதிகாரி

யுத்த களத்திற்கு சரத் பொன்சேக்கா பொறுப்பான அதிகாரியாவார். அதனாலே அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறுதி போரை அவரிடம் பாரப்படுத்தினார்.

அதற்கான மரியாதையை நாம் இன்றும் அவருக்கு வழங்குகிறோம்.

ஆனால் அரசியல் ரீதியில் அவரை நாம் நோக்குவது வோறான கோணத்தில் பார்க்கிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button