
தமிழக முதல்வரும் நடிகருமான சி. ஜோசப் விஜய், சனிக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
2026ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப்பின் 5ஆவது சுற்றுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.
இந்திய நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் Ajith RedAnt by Virage அணிக்காக பிரான்ஸ் வீரர் ரோமேன் வொஸ்னியாக் உடன் இணைந்து போட்டியிடவுள்ளார்.
முன்னாள் Formula One வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் Ajith RedAnt Racingஅணிக்காக LMP3 பிரிவில் முழுமையான இந்திய இணையாக களமிறங்குகின்றனர்.
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Michelin Le Mans Cup, சகிப்புத்தன்மை கார் பந்தய சாம்பியன்ஷிப் தொடராகும். European Le Mans Series மற்றும் 24 Hours of Le Mans போன்ற உயர்நிலை போட்டிகளுக்கு முன்னேற விரும்பும் வீரர்களுக்கான முக்கிய தளமாக இது விளங்குகிறது.
இரண்டு மணி நேரம் நடைபெறும் சில்வர்ஸ்டோன் பந்தயம், 5.891 கிலோமீட்டர் நீளமான Grand Prix சுற்றுப்பாதையில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சீசன் ஒக்டோபர் மாதம் போர்டிமாவோவில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்.





