தமிழீழம்

முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு

முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button