உலகம்

30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பாவில் தோன்றிய அரிய சூரிய கிரகணம்

ஐக்கிய இராச்சியத்திலும் (UK) ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை சூரிய கிரகணத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து பார்த்த மக்களுக்குப் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்ததோடு, அது பிரித்தானிய நேரப்படி இரவு 7.00 மணிக்குச் சற்றுப் பிந்தி உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் 90% க்கும் அதிகமான பகுதியைச் சந்திரன் மறைத்திருந்ததைக் காண முடிந்தது.

எனினும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் முழுச் சூரிய கிரகணத்தை அனுபவிக்க முடிந்ததாகவும், அந்நேரங்களில் பகல் வேளையிலும் கூட அப்பகுதிகள் முழு இருளில் மூழ்கியமை ஒரு சிறப்புமிக்கக் காட்சியாக அமைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காகத் திரண்ட பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே ஆச்சரியக் குரல்களும் ஆரவார ஒலிகளும் எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அரிய சூரிய கிரகணமானது பிரபஞ்சத்தின் மகத்துவத்தையும் இயற்கையின் விசித்திரத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button