
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், இந்த கிரகத்திலேயே அதிக மசகு எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம் தான் உள்ளது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு பல இரகசிய வழிகளில் இருந்து எண்ணெய் வந்து கொண்டிருப்பதாகவும் அவற்றில் சிலவற்றைத் தான் வெளியில் பகிரங்கமாகச் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒரு கொள்கலன் மசகு எண்ணெயின் விலை 300 டொலருக்குச் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், அமெரிக்காவின் உத்திகளால் அது தற்போது 96 டொலர் என்ற அளவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்





