விளையாட்டு

PSL வரலாற்றில் குசல் மெண்டிஸ் மெகா சாதனை!

பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) வரலாற்றில், ஒரு பருவகாலத்தில் (Season) 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குசல் மெண்டிஸ், இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதற்கு முன்னர் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றிருந்த போதிலும், எவராலும் எட்ட முடியாத 500 ஓட்டங்கள் என்ற இலக்கை மெண்டிஸ் முதன்முறையாகக் கடந்துள்ளார்.

 

வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் ஒரு லீக் தொடரில் இலங்கை வீரர் ஒருவர் இவ்வாறானதொரு சாதனையைப் படைத்திருப்பது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது

முன்னதாக எந்தவொரு வெளிநாட்டு வீரரும் ஒரே பதிப்பில் 500 ஓட்டங்களை கடந்ததில்லை.

 

இதற்கு முன்பு, 2023இல் ரில்லே ரோசோவ் எடுத்த 453 ஓட்டங்களே ஒரு வெளிநாட்டு வீரரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

 

குறித்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள குசல் மெண்டிஸ் 500 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button