இந்தியா

ஒரு வாக்கு கூட விடுபடக்கூடாது!” – ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய த.வெ.க தலைவர் விஜய் வேண்டுகோள்!

வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை எக்காரணம் கொண்டும் தவிர்க்காமல் ஆற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

 

வாக்காளப் பெருமக்களே,வணக்கம்.

நமது வாக்கு- நமது உரிமை ஜனநாயகக் கடமை எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்.

 

தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து, வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.

ஜனநாயகம் காப்பது நம் கடமை ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button