
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இதுவரை சீர்செய்யப்படவில்லை.
இதனையடுத்தே, தமது அறிவுறுத்தலை பின்பற்றுமாறு பொது மக்களிடம், குடிவரவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று வருகை தந்த விண்ணப்பதாரர்களுக்கு, திங்கட்கிழமை சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





