
இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக இன்று (12) காலை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து ஆரம்பித்த தொடர் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
போராட்டக்காரர்கள் பொதுமக்களுக்கோ அல்லது வாகனப் போக்குவரத்துக்கோ இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்துச் செயல்படக் கூடாது.
தற்போது உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வருவதைக் கருத்திற் கொண்டு, மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சிற்கு முன்பாகத் தமது கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தொடர் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ள நிலையில், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக இந்த நீதிமன்றக் கட்டளை காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது.




