உலகம்

மருந்து விலை குறைப்பு ஒப்பந்தத்தில் மயங்கி வீழ்ந்த நிர்வாகி -அதிர்ச்சியில் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அருகே இருந்த நிர்வாகி ஒருவர் திடீரென மயக்கமடைந்த சம்பவம், அலரி மாளிகையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில், உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்போது, மருத்துவ அதிகாரிகள் உள்பட மருந்து நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மருந்து விலைக் குறைப்பு குறித்து ட்ரம்ப் அறிவிக்கும்போது, அவரின் பின்னால் நின்றுகொண்டிருந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் நிர்வாகியான கார்டன் ஃபிண்ட்லே என்பவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இருப்பினும், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை, நுகர்வோருக்கு நேரடியாக விற்க முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு ஜிஎல்பி -1 மருந்தை மிகவும் மலிவான விலையில் வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button