இந்தியா

அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய்?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் இம்முறை அரசியல் பிரச்சாரத்திற்காக, கரூர் கூட்டத்திற்காக அல்ல, கட்சி மூடப்படலாம் என்ற விவாதங்களால்தான். தொடர்ச்சியான பின்னடைவுகள் மற்றும் அதிகரித்து வரும் உட்கட்சி பூசல்கள் காரணமாக விஜய் கட்சியை கலைத்துவிடுவார் என பல TVK தொண்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கரூர் கூட்டத்தின் போது ஏற்பட்ட விபத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுப் பிம்பத்திற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியதில் இருந்து இந்த கவலைகள் தொடங்கின. கட்சி தலைமை மீதும், கட்சி மீதும், தொண்டர்கள் மீது இந்த சம்பவத்திற்கு பின் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. விவாதங்கள் எழுந்தன.

கட்சியை கலைக்கும் விஜய்?
இந்த சூழ்நிலை கையாளப்பட்ட விதம் குறித்து விஜய் மிகவும் வருத்தமடைந்ததாகவும், அதன்பின்னர் முக்கிய கட்சி நடவடிக்கைகளில் அவர் மௌனம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவே ஆதரவாளர்களிடையே ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கடந்த இரண்டு நாட்களாக கட்சியை கலைப்பது தொடர்பாக போஸ்டுகளை செய்து வருகின்றனர். எக்ஸ் தளத்தில் நடக்கும் விவாதங்களில் கூட இதே கருத்துக்களை வைக்கின்றனர்.

விஜய் ஆர்வம் காட்டவில்லை
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கரூருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் செல்வதில் விஜய் இப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு போக வேண்டாம். அங்கே மண்டபம் கிடைக்கிறது.. கிடைக்காமல் போவது பிரச்சனை இல்லை. கரூர் செல்வது இப்போதைக்கு சரியாக இருக்காது.

கொஞ்சம் யோசித்துவிட்டு கரூர் செல்லலாம். நான் போனால் சரியாக இருக்காது. என்னிடம் யாராவது நேரடியாக கேள்விகளை கேட்டால் சரியாக இருக்காது. சிலர் சட்டென கோபப்பட்டால் பிரச்சனை ஆகிவிடும் . அதனால் நாம் யோசித்து செல்லலாம். முதலில் இரண்டாம் கட்ட தலைவர்கள் போகட்டும்.. அவர்களை போய்விட்டு வந்த பின் நாம் போவதை பற்றி யோசிக்கலாம் என்று விஜய் கூறியதாக தெரிகிறது. விஜயின் இந்த நிலைப்பாடு தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தவெக உட்கட்சி முதல்
ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் சமீபத்தில் பல மாவட்ட அளவிலான கூட்டங்களுக்கு பொறுப்பேற்ற ஜான் ஆரோக்யசாமி ஆகியோருக்கு இடையே வளர்ந்து வரும் உட்கட்சி அதிகாரப் போட்டி இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கரூர் விவகாரத்திற்குப் பிறகு ஆனந்த் ஏறக்குறைய இரண்டு வாரங்கள் தலைமறைவாகி இருந்தது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், ஜான் ஆரோக்யசாமி பல கூட்டங்களில் தலைமை தாங்கினார். இது கட்சிக்குள் அதிகார மாற்றம் ஏற்பட்டதற்கான ஒரு அறிகுறி என்று சிலர் கருதுகின்றனர்.

பாஜக தரும் அழுத்தம்
இன்னும் நிலைமையை மோசமாக்கும் வகையில், டெல்லியில் இருந்து கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) தமிழ்நாட்டில் TVK உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு விஜய்யை சமாதானப்படுத்த BJP தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக துணை முதல்வர் பதவியை வழங்குவதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இத்தகைய அழுத்தத்தால் விஜய் சங்கடமாக உணர்வதாகவும், அவர் எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவை கொள்கை எதிரி என்றுவிட்டு அவர்களுடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்காது. அதோடு பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதன்பின் சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு வரவே வராது என்று விஜய் அஞ்சுகிறாராம். அதே சமயம் பாஜகவின் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறாராம்.

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் தற்போது குழப்பம் மற்றும் கவலையில் உள்ளனர். விஜய்யின் தனிப்பட்ட பிம்பம் மற்றும் தூய்மையான அரசியலுக்கான அவரது அர்ப்பணிப்பு காரணமாகவே தாங்கள் இந்த இயக்கத்தில் இணைந்ததாக பல உள்ளூர் உறுப்பினர்கள் கூறுகின்றனர். அவர் கட்சியை கலைத்துவிடுவார் என்ற அச்சம், அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. “விஜய் சார் TVK-வை மூடினால், அது மனதை உடைக்கும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த கட்சியை நம்பினர்” என்று ஒரு மாவட்ட அளவிலான உறுப்பினர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

அரசியல் ஆலோசகர்கள் சிலர், விஜய் தனது பொதுப் பிம்பம் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதாகவும், உட்கட்சி பூசல்களாலோ அல்லது கட்டாய கூட்டணிகளாலோ தனது நற்பெயர் பாதிக்கப்படுவதை அவர் விரும்ப மாட்டார் என்றும் குறிப்பிடுகின்றனர். விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக அவர் உணர்ந்தால், அடுத்த தேர்தலுக்கு முன்பே அவர் ஒரு இடைவெளி எடுப்பதையோ அல்லது TVK-வை கலைப்பதையோ பரிசீலிக்கலாம் என்றும் குண்டை தூக்கி போடுகின்றனர்.

தற்போதைக்கு, விஜய் அல்லது கட்சி தலைமையிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. ஆனால் உயர்மட்டத்தின் மௌனம், வளர்ந்து வரும் உட்கட்சி மோதல் மற்றும் வெளிப்புற அரசியல் அழுத்தம் ஆகியவை ஊகங்களின் புயலை உருவாக்கியுள்ளன – இது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை கவலையிலும், தமிழ்நாடு அரசியல் களத்தை விஜய்யின் அடுத்த நகர்வுக்காக உன்னிப்பாகக் காத்திருக்கவும் வைத்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button