உலகம்

வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முதலீடுகள் குறித்து கவனம் செலுத்தியது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எனினும், ஒரு காலத்தில் ட்ரம்பின் நெருங்கிய தொழில்துறை நண்பர்களில் ஒருவரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் இந்த நிகழ்வில் பங்கெடுக்கவில்லை.

விண்வெளிக் கொள்கை மற்றும் அரசாங்க ஒப்பந்தங்கள் தொடர்பான மோதல்களைத் தொடர்ந்து அண்மைய மாதங்களில் அவர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து தன்னைத்தானே ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையின் புதிய செயற்கை நுண்ணறிவு கல்வி பணிக்குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தலைமை தாங்கினார் மற்றும் சில தொழில்நுட்பத் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button