உலகம்

அமெரிக்காவில் மனித தசை திசுக்களை உண்ணும் புழு கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு மனிதருக்கு தசை திசுக்களை உண்ணும் புழு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் (NWS) என்பது ஒரு வகை ஒட்டுண்ணி ஈயால் ஏற்படும் தொற்று. இந்த ஈயின் புழுக்கள் (லார்வாக்கள்) உயிருள்ள திசுக்களை உண்ணுகின்றன.

இந்த ஒட்டுண்ணி முதன்மையாக கால்நடைகளைப் பாதிக்கிறது. ஆனால், அரிதாக மனிதர்களையும் தாக்கலாம் .

ஒட்டுண்ணி

பெண் ஈக்கள், கால்நடைகள் மற்றும் மான் போன்ற விலங்குகளின் காயங்களில் தங்கள் முட்டைகளை இடுகின்றன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention – CDC) மேரிலாண்ட் சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்த பாதிப்பை ஆய்வு செய்து வருகிறது.

சுமார் 24 மணி நேரத்திற்குள், முட்டைகள் பொரிந்து, அவை வளரும்போது காயத்திற்குள் உள்ள உயிருள்ள திசுக்களை உட்கொள்ள ஆரம்பிக்கின்றன.

தென் அமெரிக்கா மற்றும் கரீபியனில் பொதுவாகக் காணப்படும் இந்த ஒட்டுண்ணி, தற்போது மெக்சிகோ உட்பட ஒவ்வொரு மத்திய அமெரிக்க நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நோய்த் தொற்று உயிருக்கு ஆபத்தானது என்றாலும் சரியான மருத்துவ கண்காணிப்பின் மூலம் இதனை குணப்படுத்தலாம்.

இந்த நோய் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பதற்காக அமெரிக்க வேளாண்மைத் துறை, ஏனைய விவசாய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button