
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோசிங்டனில் வீதியோரங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குற்றவாளிகள் என கருதுபவர்களை சிறையில் அடைக்கவும் தீர்மானித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது வோஷிங்டனை முன்னர் இருந்ததை விட பாதுகாப்பானதாகவும் அழகாகவும் மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நடவடிக்கை மிக விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் வீதியோரங்களில் வசிப்பவர்களுக்கு வேறு இடங்களை வழங்கவுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.





