
இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கும் மற்றும் புனரமைக்கும் பணிகளுக்காகவே இந்த அவசர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் அனர்த்தத்திலிருந்து மீட்பு நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





