
இலங்கை வந்தடைந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும், இலங்கையின் விளையாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய இடைக்காலக் குழு தொடர்பான விவகாரம் குறித்து மிக முக்கியமாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் எதிர்கால நகர்வுகள் குறித்து இருதரப்பிற்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.





