
எல்பிட்டிய – மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.





