
யால தேசிய பூங்காவில் வனவிலங்கு சட்டங்களை மீறியதாக கூறப்படும் ஐந்து சுற்றுலா பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சபாரிக்காக வந்த இரண்டு ஜீப் வண்டிகளில் பயணித்த குழுவினர் பூங்கா விதிகளை மீறி நடமாடியதுடன், அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என யால ஜீப் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன





