இந்தியா

இந்தியாவில் பற்றி எரிந்த வைத்தியசாலை! நோயாளிகள் பலருக்கு நேர்ந்த கதி

இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலுள்ள அரசு சார்ந்த வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலை அதிகாரிகளின் கூற்றுப்படி, நியூரோ ஐசியுவின் சேமிப்பு பகுதியில் ஏற்பட்ட மின்சார கசிவே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகள்

தீ வேகமாக பரவியதன் காரணமாக புகை மூட்டம் கட்டிடத்தை மூடத்தொடங்கியுள்ளது, அதன்போது அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களை காண வந்திருந்த உறவினர்களும் உடனடியாக வெளியேறியுள்ளனர்.

பின்னர், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து இரண்டு மணி நேரத்திற்குள் தீயை கட்டுப்படுத்தியுள்ளதுடன், 14 நோயாளிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

 

உயர் மட்டக் குழு விசாரணை

எவ்வாறாயினும், பாரியளவிலான மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அரசு உயர் மட்டக் குழு விசாரணை நடத்தும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button