
அரசுக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் சனிக்கிழமை (16) கந்தப்பளை நகரில் மாலை 5 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் தீப்பந்தங்களை ஏற்றியும் கோஷங்களை எழுப்பியும் இக் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்போது பொருட்களின் விலைகளை குறைக்கவும். தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும்.
தோட்ட தொழிலாளர்களின் 2000 ரூபாய் சம்பளத்தை அதிகரித்து வழங்க வேண்டும் எனவும். இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் எனவும். அத்தோடு மின்சார கட்டணத்தை குறைக்க கோரியும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கந்தபளை நகரில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.





