
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO, பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு (Geosynchronous Orbit) தனது புதிய பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியுள்ளது.
EOS-05 என அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் GISAT-1A என்றும் குறிப்பிடப்படுகிறது. இது GSLV-F17ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.
இந்தியாவின் “வானில் உள்ள கண்” என வர்ணிக்கப்படும் இந்த செயற்கைக்கோள், பேரிடர் கண்காணிப்பு, விவசாயம் மற்றும் வனத்துறை உள்ளிட்ட தேவைகளுக்காக பரந்த நிலப்பரப்புகளை அடிக்கடி படம்பிடிக்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஏவப்பட்ட GISAT-1 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சுற்றுப்பாதையை அடையத் தவறிய நிலையில், அதற்கு மாற்றாக EOS-05 செயல்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோளின் திட்டமிடப்பட்ட செயல்பாட்டு காலம் 10 ஆண்டுகள் ஆகும்.





