
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வை அனுஷ்டிக்க காணாமல் போன ஆக்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற கோரிக்கையை முன்வைத்தும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் இன்று போராட்டத்தினை மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தின் போது மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து OMP அதிகாரிகளை சந்திக்க முயன்ற தாய்மாரை பொலிசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து விழுத்தியதால் அவ்விடத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.







