தமிழீழம்

ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய நில மீட்பு போராட்டத்தை முன்னெடுக்க சாணகியன் எம்.பி அழைப்பு

வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரியுள்ளார்.

 

வலி வடக்கில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

பாதுகாப்பு காரணங்களுக்கு என கூறி தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் , அந்த காணிகளில் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கே நாம் போராடும் இடத்திற்கு அருகில் இராணுவத்தினர் , தனியாருக்கு சொந்தமான காணியில் சிற்றுண்டி சாலை அமைந்துள்ளனர்.

நாம் வலி. வடக்கில் மாத்திரம் நின்று எமது காணிகளை விடுவிக்க கோரி குரல் கொடுத்தாலும் , எவ்வளவு போராடினாலும் , அது தமிழ் சமூகத்தின் மத்தியில் தன சென்றடைகிறது

அரசாங்க தரப்புக்கு இந்த செய்திகள் போய் சேரும். போராட்ட இடங்களில் நிற்கிற புலனாய்வாளர்கள் ஊடாக தகவல்கள் போய் சேரும்.

ஆனால் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் தெரிய வேண்டும் ஆயின் , நாம் ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

” அரக்கலயா” போராட்டம் போன்று , மயிலிட்டி , பலாலி , வசாவிளான் , கேப்பாபிலவு , மயிலத்தமடு என காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டிய இடங்களை குறித்து தனித்தனியே கூடாரங்கள் அமைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்குள் வேறு கோரிக்கைகள் இன்றி , தனியே காணி விடுப்பை மாத்திரம் முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்

இவ்வாறாக நாம் ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டத்தை முன்னெடுத்தால் வெளிநாட்டு தூதுவர்கள் கவனத்தையும் ஈர்க்க முடியும்.

எனவே நாம் ஜனாதிபதி செயலகம் முன்பாக காணி விடுப்பை கோரி பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தயாராக வேண்டும் என கோரியுள்ளார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button