
ஹங்கோர்’ ரக நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது.
பாகிஸ்தான் கடற்படையின் முதல் ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல் கராச்சி துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது.
இந்த கப்பலில் பல புதிய அம்சங்கள் உள்ளன.
ஹங்கோர்’ என்பது அமைதியாகப் பின்தொடர்ந்து திடீரெனத் தாக்கும் ஒரு வகையான சுறா மீன் ஆகும்.
பாகிஸ்தான் கடற்படை வரலாற்றில் சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நவீன நீர்மூழ்கிக் கப்பலில் புதிய சென்சார்கள், மேம்பட்ட போர் அமைப்புகள், வெளிக்காற்று சாராத உந்துவிசை அமைப்பு மற்றும் மிகச்சிறந்த மறைந்திருந்து தாக்கும் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன





