
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதாகையொன்றுக்கு பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபை நாகரிகமின்றியும், தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டும் கூட்டங்களைக் குழப்பும் வகையில் செயற்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (19) நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, யாழ்ப்பாண நகரில் உள்ள அவரது பதாகைக்குச் பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.





