
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை உட்பட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாளில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றுடன் சேர்த்து 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 360 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 351 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





