
பிலிப்பைன்ஸ் – மின்டானோ தீவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பிலிப்பைன்ஸ் , இந்தோனேசியா , மலேசியா நாடுகளின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது





