
டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்துடன் இணைந்து டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழலில் பேருந்து கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்க முடியாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் மக்கள் வழமையான கட்டணங்களிலேயே பயணிக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.





