
பாதிப்பை ஏற்படுத்தும் அபாயச் சூழல்கள் உருவாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. செலவுகளின் அதிகரிப்பால் சில நிறுவனங்கள் செலவு கட்டுப்பாட்டிற்காக பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளைகளை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றன.
இந்த சீர்திருத்தங்கள் குறுகிய காலத்தில் சிரமங்களை ஏற்படுத்தினாலும், நீண்ட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உதவும் என சமகால அரசாங்கம் கூறுகிறது. ஆனால், 2022ஆம் ஆண்டுமுதல் இந்த நிலையில் இதுவரை பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தில் இருந்து ஓரளவேனும் முன்னோக்கிச் செல்ல சர்வதேச முதலீடுகளை அதிகரித்தல், ஏற்றுமதி வளர்ச்சி, சுற்றுலா வருவாயை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
ஆனால், புவிசார் அரசியல் போக்குகள் மற்றும் வல்லரசு நாடுகளின் பொருளாதார தீர்மானங்கள், போர் சூழல்கள் என்பன இலங்கையின் பொருளாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி வருfகின்றன. வரி உயர்வுடன் மக்களுக்கு சாதமான பொருளாதார சூழலை உருவாக்கும் அரசாங்கத்தில் நகர்வுகள் 2022ஆம் ஆண்டு பின்னர் இதுவரை கைகொடுக்கவில்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்து இருக்குமாயின் வாழ்க்கை செலவு உயர் என்பதும் தொடர்ச்சியாக இருக்கும் என்பதுடன், சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் சர்வதேச கடனை மிள செலுத்தும் போது மீண்டும் பல்வேறு வரி உயர்வுகளை நோக்கி இலங்கை நகர வேண்டி துர்ப்பாக்கி நிலை உள்ளதாக எதிர்வுக்கூறல்கள் வெளியாகி வருகின்றன.
எனவே, பொருளாதார சீர்திருத்தங்களுடன் இணைந்து சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டால் மட்டுமே நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையும் சமூக நலனும் ஒரே நேரத்தில் முன்னேறும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.




