உலகம்

பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா?

உள்ளாட்சி தேர்தல்களின் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதன்படி, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களம் வேகமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒருபுறம் தேர்தல் நடவடிக்கைகள் உச்சத்தில் இருக்க, மறுபுறம் எதிர்பாராத முடிவுகள் முக்கிய கட்சிகளுக்கு அபாய மணியை எழுப்பியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

ரிபோர்ம் யுகே கட்சி, இங்கிலாந்தில் உள்ள பல கவுன்சில்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

 

அத்துடன், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு பகுதிகளில் இரண்டாவது மேயரையும் உறுதி செய்துள்ளது.

 

இந்த நிகழ்வானது, பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.

 

அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி மற்றும் லிபரல் டெமோக்ராட்ஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.

 

இந்நிலையில், பசுமைக் கட்சியும் பல துறைகளில் தனது நிலையை வலுப்படுத்த முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சமீபத்திய முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில் ரிபோர்ம் யுகே கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ் இது இரு கட்சி அரசியலின் முடிவின் அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.

 

பல பகுதிகளில், குறிப்பாக வடமேற்கு இங்கிலாந்தில், அரசியல் சூழல் நிச்சயமற்றதாக உள்ளது. அங்கு கடந்த காலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன.

 

இந்நிலையில், இந்த முறையும் பெரிய எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button