
• ஆசிரியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் ஏனைய நலன்விரும்பிகளையும் உள்ளடக்கிய நிர்வாக ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும்.
இது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக அல்ல,பிள்ளைகளின் நலன்களையும் அவர்களது உரிமையை உறுதி செய்வதற்காகவே. ஆகக்கூடியதாக பாடசாலை நாட்களிலாவது பசியை குறைப்பதற்காக உணவு வழங்கப்பட்டால், பிள்ளைகள் ஒழுங்காக பாடசாலைக்கு வருவார்கள். அவர்களுடைய சிந்தனைத்திறனும் சிறப்பாக வளரும்.
“பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்டத்தினூடான கல்வி — பசியை போக்கினால் தான் கல்வி மலரும். “
“இதுவே உண்மையான தரமான கல்வியின் அடித்தளம்” என குறிப்பிட்டுள்ளார்





