
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே, சாத்தியமான பேரிடர் சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் அனைத்து அரச பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்து வளிமண்டலவியல் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.





