இலங்கை

11 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வம்! உங்கள் நாட்காட்டியில் கவனித்தீர்களா?

2026 பெப்ரவரி மாதம் ஒரு தனித்துவமான நாட்காட்டி அமைப்பைக் கொண்டுள்ளது.

 

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடையும் நான்கு வாரங்களை (28 நாட்கள்) கொண்ட இந்த மாதம் ஒரு “முழுமையான மாதம்” (Perfect Month) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இத்தகைய தனித்துவமான பிப்ரவரி மாதம் 2015 ஆம் ஆண்டில் அமைந்திருந்தது.

 

 

2015க்குப் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரிய நிகழ்வு, மீண்டும் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் 2037 ஆம் ஆண்டில் நிகழும்.

 

இந்த பெப்ரவரி மாதத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) சரியாக நான்கு முறை வருவது குறிப்பிடத்தக்கது.

 

லீப் வருடம் அல்லாத ஒரு வருடத்தில், பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கும்போது நாட்காட்டியில் இந்த தனித்துவமான அமைப்பு உருவாகிறது.

 

இந்த மாதம் நாட்காட்டியில் மிகவும் நேர்த்தியாகக் காணப்படுவதால், பலரும் இதனை “செவ்வக மாதம்” (Rectangular Month) என்றும் அழைக்கின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button