
இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் படகு ஒன்றும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.





