இலங்கை

சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

பேரிடரால் வீடுகளுக்கு ஏற்கட்ட சேதங்கள் குறித்து தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம்  ரூபா (500,000) வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

டித்வா சூறாவளி காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முறையான சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு முன்பே அரசாங்கம் ஆரம்பகட்ட நிதி உதவியை வழங்கியிருந்தது.

120,000 ஆயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.  இந்த வீடுகள் குறித்து விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு  ஒரு வருடமேனும் செல்லும். இதனால் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சரியான நேரத்தில் உதவியை உறுதி செய்வதற்காக மதிப்பீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து இலட்சம் ரூபா வீதம் (ரூ. 500,000) நிலையான தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இருப்பினும், முறையான சேத மதிப்பீட்டை மேற்கொள்ள விரும்பும் குடும்பங்கள் நிலையான கட்டணத்திலிருந்து விலகலாம் என்றும், சேதத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சேதத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ. 2.5 மில்லியன் அல்லது ரூ. 5 மில்லியனாக கூட இருந்தாலும் அரசாங்கம் அதற்கேற்ப முழு மதிப்பிடப்பட்ட தொகையையும் வழங்கும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button