இலங்கை

அத்தியாவசியப் பொருட்கள்: அதிக விலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எச்சரிக்கை

தற்போதைய பேரிடர் நிலையைப் பயன்படுத்தி, நுகர்வோர் பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, தேவையின்றி பதுக்கினாலோ அல்லது மறைத்து வைத்தாலோ, அத்தகைய நியாயமற்ற அல்லது தீங்கிழைக்கும் வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றும் எந்தவொரு வணிக நிறுவனம் அல்லது தனிநபர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் இன்று அறிவித்துள்ளார்.
​அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி அவர்கள், தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, சில வர்த்தகர்கள் நுகர்வோர் பொருட்களை அநியாயமாக அதிக விலைக்கு விற்க முயற்சிப்பதாகக் அவதானிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
​”அத்தியாவசிய சேவைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானது. இலங்கை சமூகம் முன்மாதிரியான ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய இச்சமயத்தில், நுகர்வோர் பொருட்களை அநியாயமாக அதிக விலைக்கு விற்று சட்டவிரோத இலாபம் ஈட்ட முயற்சிப்பது ஒழுக்கக்கேடானது மட்டுமல்ல, சட்டவிரோதமும் ஆகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
​அனைத்து வர்த்தகர்களும் நுகர்வோர் பொருட்களை, விலை குறிக்கப்பட்ட இடங்களில் அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) விற்பனை செய்வதையும், மற்ற அனைத்துப் பொருட்களையும் நியாயமான விலையில் விற்பனை செய்வதன் மூலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button